Newsலண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்

-

ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும்.

இதற்கான உடனடி நடவடிக்கையை நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. சிலையை அதன் அசல் வடிவமைப்புடன் மீட்டெடுக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் – என்று அது கூறியது.

ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் காந்திஜியின் விருப்பமான பாடல்களுடன் நினைவுகூரப்படுகிறது.

இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நாசவேலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...