Newsநேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

-

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபாகும்.

எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

குமாரி தேர்வு செய்யப்படும் முறை:

2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும். குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.

Latest news

10 நாடுகளுக்கு விரிவடைந்து, விசா தேவைகளை எளிதாக்கும் Australian Immi App

ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது. அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...

ஆஸ்திரேலியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...

போலி நாணயத்தாள்கள் பற்றி கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கடந்த...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை...

எலோன் மஸ்க் தொடர்பில் வெளியான சமீபத்திய அறிக்கை

உலகில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்ததால்...

இன்று தொடங்கும் விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம்

விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறைத் துறை, 2025–2026 திட்ட ஆண்டிற்காக விக்டோரியாவிற்கு...