Newsநேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

-

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபாகும்.

எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

குமாரி தேர்வு செய்யப்படும் முறை:

2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும். குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.

Latest news

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...