News15 மனைவிகள், 30 குழந்தைகளுடன் அபுதாபி சென்ற மன்னர்

15 மனைவிகள், 30 குழந்தைகளுடன் அபுதாபி சென்ற மன்னர்

-

ஆபிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னர் தனது 15மனைவிகள் மற்றும் வேலையாட்களுடன் தனி விமானத்தில் பயணித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி, கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தென்னாபிரிக்க நாடான எஸ்வதினியின் மன்னராக மூன்றாம் மஸ்வாதி கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வேலையாட்கள் புடைசூழ தனி விமானம் மூலம் அபுதாபிக்கு சென்றிருந்தார்.

மன்னரின் இந்த பிரம்மாண்ட வருகையால், அபுதாபி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பாதுகாப்பு கருதி சில முனையங்கள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த காணொளி மீண்டும் வைரலாகி மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், அவரது நாட்டின் மக்கள் படும் இன்னல்களுக்கும் இடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்த காணொளியை பகிர்ந்த பலரும் மன்னரின் செயலுக்குக் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...