Newsஆரம்பகால குழந்தைப் பருவ மையங்களின் தரத்தை மேம்படுத்த திட்டம்.

ஆரம்பகால குழந்தைப் பருவ மையங்களின் தரத்தை மேம்படுத்த திட்டம்.

-

ஆஸ்திரேலிய கல்வித் துறை, குழந்தைப் பருவத் துறைக்கான உடனடி சோதனைகளைத் (spot checks) தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதம் தொடங்கி ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு (ECEC) சேவைகளில் அறிவிக்கப்படாத On-site ஆய்வுகளை நடத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கப்போவதாகத் துறை கூறுகிறது.

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிராந்திய மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 40 முதல் 45 சேவை மையங்களில் On-site ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

ஜூலை 31 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தச் சட்டம் துறைக்கு புதிய நுழைவு அதிகாரங்களை வழங்கியுள்ளது.

அதன்படி, குழந்தை பராமரிப்பு மானிய இணக்க சிக்கல்களைக் கண்டறிந்து, கவனிக்கப்பட்ட தரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உள்ளூர் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க இந்தத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

பல சேவை மையங்கள் உயர் தரத்தைப் பேணுவதற்கு உறுதிபூண்டிருந்தாலும், இந்த ஆய்வுகளின் நோக்கம் தரத்தை உயர்த்துவதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் என்று கல்வித் துறை சுட்டிக்காட்டுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...