இந்தோனேஷியாவில் உள்ள Mount Levodopi Laki-Laki எரிமலை நேற்று 15ம் திகதி வெடித்துள்ளது.
எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தோனேஷிய நேரப்படி எரிமலை அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர்.
வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை இந்தோனேஷியாவின் புவியியல் மையம் வெளியிட்டது.
எரிமலையிலிருந்து 6 கிலோ மீற்றர் முதல் ஏழு கிலோ மீற்றர் வரையிலான தூரம் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.