உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார்.
இச்சந்திப்பின்போது உக்ரெய்னின் பாதுகாப்பு, ஆற்றல், தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி புடினையும் ட்ரம்ப் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் இப்போது ஜனாதிபதி புடினுடன் பேசி வருகிறேன். இந்த நீண்ட உரையாடல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் உள்ளடக்கங்களை விரைவில் தெரிவிப்பேன். புடினும் அதனை தெரிவிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.