Newsபோர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை 20 இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன்வசம் இருந்த பல்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது.

இந்நிலையில் காஸாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காஸாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, காஸா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை அஙஙகுள்ள ஊடகவியளாலர்கள் தெரிவித்துள்ளார்

இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...