News“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“சரியாக நடக்காவிட்டால் அழிக்கப்படுவார்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

இந்த அமைதி ஒப்பந்தமானது, கடந்த 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்பும் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் படைகளுக்கிடையில் காஸாவில் தொடர் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பில், செய்தியாளர்களுக்கு பதிலளித்த ட்ரம்ப்,

“அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால் நாங்கள் உள்ளே சென்று சரிசெய்ய வேண்டியிருக்கும். அது விரைவாகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக்கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே செல்வார்கள். என்னால் அவர்களிடம் உள்ளே சென்று அதைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியும். ஆனால், இப்போது நான் அதைக் கூறவில்லை. ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...