Newsகொரோனா தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

கொரோனா தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

-

COVID-19 mRNA தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகள் நீண்ட காலம் வாழ உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

சிகிச்சையைத் தொடங்கிய 100 நாட்களுக்குள் COVID-19 mRNA தடுப்பூசியைப் பெற்ற நுரையீரல் அல்லது தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிகிச்சை பெறாதவர்களை விட இரண்டு மடங்கு நீண்ட காலம் வாழ்ந்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Texas பல்கலைக்கழக MD Anderson புற்றுநோய் மையத்தின் ஆய்வின்படி, நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் சராசரி உயிர்வாழ்வு விகிதம் மூன்று ஆண்டுகள் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் தோல் புற்றுநோய் நோயாளிகள் 40 மாதங்கள் வரை கூடுதல் ஆயுளைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 mRNA தடுப்பூசிகள் பல புற்றுநோய் சிகிச்சைகளைப் போலவே செயல்படுகின்றன. நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான சேத் சீதம் கூறுகிறார்.

புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து மறைக்க முயற்சி செய்கின்றன. ஆனால் mRNA தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாக எழுப்பி புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடத் தூண்டுகின்றன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

கோவிட் mRNA தடுப்பூசியைப் பெற்றவர்களின் இரத்தத்தில், ஒரு நாளுக்குள் இயற்கையான Antiviral எச்சரிக்கைப் பொருளான Interferon-இன் அளவு கூர்மையாக அதிகரித்ததாகவும், நோயெதிர்ப்பு செல்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த உறுதிப்படுத்தும் சோதனைகள் வெற்றியடைந்தால், COVID-19 mRNA தடுப்பூசிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த தேர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...