Newsகரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

-

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய மிகப்பெரிய அமெரிக்க போர்க் கப்பல் இதுவாகும்.

அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும் இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலானது, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...