Newsகரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

-

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய மிகப்பெரிய அமெரிக்க போர்க் கப்பல் இதுவாகும்.

அண்மைக் காலமாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும் இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் போன்றவையும் உள்ளடங்குவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலானது, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...