ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள நபரை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நபர் ஈரானின் புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரியான சர்தார் அமர் என்று கூறினார்.
உலகம் முழுவதும் 11,000 தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தியதாகவும், பல்வேறு நாடுகள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்தார் அமரின் கட்டளையின் கீழ் யூத மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான தோல்வியுற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறினார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் சந்தேகம் உள்ளது.
சிட்னியில் உள்ள Lewis’ Continental Kitchen மற்றும் மெல்பேர்ணில் உள்ள Adass Israel Synagogue ஆலயத்தில் தாக்குதல்கள் நடந்தன.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தக் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆஸ்திரேலிய உளவுத்துறை நிறுவனமான ASIO, ஈரானிய IRGC குற்றவியல் உலகில் தொடர்புகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது.
இது ஒரு வெளிநாட்டு சக்தியால் நடத்தப்பட்ட அசாதாரண தாக்குதல் என்று பிரதமர் அப்போது கூறினார். அதன்படி, ஆஸ்திரேலிய அரசாங்கம் IRGC-ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் கான்பெராவில் உள்ள தூதரகம் மூடப்பட்டது.
IRGC தனது ஈடுபாட்டை மறைக்க முயற்சித்ததாக ASIO இயக்குநர் ஜெனரல் மைக் பர்கெஸ் கூறினார்.
இதற்கிடையில், ஈரானின் இந்த முயற்சிகளை இனி ரகசியமாக மேற்கொள்ள முடியாது என்று இஸ்ரேலிய பிரதமர் கூறுகிறார்.
சிட்னி மற்றும் மெல்போர்ன் தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு கட்டிடங்களும் பெருமளவில் பொருள் சேதத்தை சந்தித்தன.





