Breaking Newsகுற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

-

நான்கு வயது முதலான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு புத்த கோவிலின் தலைமை துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ணில் நான்கு வார மாவட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 70 வயது நாவுன்னே விஜித (Naotunne Vijitha) என்பவர் மீதே 19 சிறார் துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

விஜித வசிக்கும் புத்த கோவில் குடியிருப்பு, பிரார்த்தனை அறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குள் என நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

1994 ஆம் ஆண்டு ஸ்பிரிங்வேலில் உள்ள தம்ம சரண புத்த கோவிலின் தலைமை துறவியாக வெளிநாட்டிலிருந்து மெல்பேர்ணுக்கு குடிபெயர்ந்த பிறகு விஜிதவின் துஷ்பிரயோகம் தொடங்கியது என்றே சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டில் தொடர்புடைய கோயில் கீஸ்பரோவிற்கு மாற்றப்பட்ட பின்னரும் விஜிதவின் துஸ்பிரயோகம் தொடர்ந்தது என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், தற்போது பெரியவர்களாகிவிட்டனர், அனைவரும் தங்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர், அதேபோல் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சாட்சியமளித்தனர்.

ஆனால் விஜித தரப்பு வாதிடுகையில், உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குற்றச்சாட்டுகள் அனைத்தும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில், விஜித மீதான 19 குற்றச்சாட்டுகளில் 17 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒருமித்த தீர்ப்பிற்குப் பதிலாக பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி பர்தீப் திவானா ஜூரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...