Breaking Newsகுற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

-

நான்கு வயது முதலான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு புத்த கோவிலின் தலைமை துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ணில் நான்கு வார மாவட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 70 வயது நாவுன்னே விஜித (Naotunne Vijitha) என்பவர் மீதே 19 சிறார் துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

விஜித வசிக்கும் புத்த கோவில் குடியிருப்பு, பிரார்த்தனை அறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குள் என நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

1994 ஆம் ஆண்டு ஸ்பிரிங்வேலில் உள்ள தம்ம சரண புத்த கோவிலின் தலைமை துறவியாக வெளிநாட்டிலிருந்து மெல்பேர்ணுக்கு குடிபெயர்ந்த பிறகு விஜிதவின் துஷ்பிரயோகம் தொடங்கியது என்றே சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டில் தொடர்புடைய கோயில் கீஸ்பரோவிற்கு மாற்றப்பட்ட பின்னரும் விஜிதவின் துஸ்பிரயோகம் தொடர்ந்தது என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், தற்போது பெரியவர்களாகிவிட்டனர், அனைவரும் தங்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர், அதேபோல் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சாட்சியமளித்தனர்.

ஆனால் விஜித தரப்பு வாதிடுகையில், உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குற்றச்சாட்டுகள் அனைத்தும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில், விஜித மீதான 19 குற்றச்சாட்டுகளில் 17 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒருமித்த தீர்ப்பிற்குப் பதிலாக பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி பர்தீப் திவானா ஜூரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Latest news

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...

விற்பனைக்கு வந்துள்ள பிரைட்டன் அரண்மனை

126 ஆண்டுகள் பழமையான Brighton Palace Pier எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற கட்டமைப்பை அதன் தற்போதைய உரிமையாளரான...

உக்ரைன் போரில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆஸ்திரேலியர்

உக்ரைனில் சண்டையின் போது இறந்த ஆஸ்திரேலிய நாட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஸ்ஸல் ஆலன் வில்சன் "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற...

பெரும்பாலான வேலைகளை காப்பாற்றிய Cheap as Chips ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனைச் சங்கிலியான Cheap as Chips-இன் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Cheap as Chips சங்கிலி...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2025 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது...

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...