Breaking Newsகுற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மெல்பேர்ண் புத்த கோவிலின் தலைமை துறவி

-

நான்கு வயது முதலான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு புத்த கோவிலின் தலைமை துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ணில் நான்கு வார மாவட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 70 வயது நாவுன்னே விஜித (Naotunne Vijitha) என்பவர் மீதே 19 சிறார் துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

விஜித வசிக்கும் புத்த கோவில் குடியிருப்பு, பிரார்த்தனை அறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குள் என நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட ஆறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

1994 ஆம் ஆண்டு ஸ்பிரிங்வேலில் உள்ள தம்ம சரண புத்த கோவிலின் தலைமை துறவியாக வெளிநாட்டிலிருந்து மெல்பேர்ணுக்கு குடிபெயர்ந்த பிறகு விஜிதவின் துஷ்பிரயோகம் தொடங்கியது என்றே சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டில் தொடர்புடைய கோயில் கீஸ்பரோவிற்கு மாற்றப்பட்ட பின்னரும் விஜிதவின் துஸ்பிரயோகம் தொடர்ந்தது என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், தற்போது பெரியவர்களாகிவிட்டனர், அனைவரும் தங்கள் விசாரணையின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர், அதேபோல் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் சாட்சியமளித்தனர்.

ஆனால் விஜித தரப்பு வாதிடுகையில், உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குற்றச்சாட்டுகள் அனைத்தும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில், விஜித மீதான 19 குற்றச்சாட்டுகளில் 17 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒருமித்த தீர்ப்பிற்குப் பதிலாக பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி பர்தீப் திவானா ஜூரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...