Newsஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

-

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கருத்துகணிப்பின்படி, உள்ளுரில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் முதல் மூன்று இடங்களில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகளை கையாள பல விடயங்களை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேறிகளை இராணுவ முகாமிற்கு மாற்றுதல், பிரான்ஸுடன் போடப்பட்டுள்ள One in – One out ஒப்பந்தம், டிஜிட்டல் அடையாள முறை இவ்வாறாக பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

இருப்பினும் தற்போது வரையில் எந்த திட்டமும் கைகொடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் புயலை கிளப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் புலம்பெயர்ந்தோருக்கு சலுகைகளை வழங்குவதை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வரி உயர்வை மேற்கொள்ள அரசாங்கம் பரிசீலித்து வருதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வாழ்க்கை சுமையுடன் போராடி வரும் மக்களுக்கு இந்த வரி உயர்வு மேலும் சுமையாக மாறும். ஆகவே மக்கள் தற்போது தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...