Newsஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

-

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கருத்துகணிப்பின்படி, உள்ளுரில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் முதல் மூன்று இடங்களில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகளை கையாள பல விடயங்களை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேறிகளை இராணுவ முகாமிற்கு மாற்றுதல், பிரான்ஸுடன் போடப்பட்டுள்ள One in – One out ஒப்பந்தம், டிஜிட்டல் அடையாள முறை இவ்வாறாக பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

இருப்பினும் தற்போது வரையில் எந்த திட்டமும் கைகொடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் புயலை கிளப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் புலம்பெயர்ந்தோருக்கு சலுகைகளை வழங்குவதை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வரி உயர்வை மேற்கொள்ள அரசாங்கம் பரிசீலித்து வருதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வாழ்க்கை சுமையுடன் போராடி வரும் மக்களுக்கு இந்த வரி உயர்வு மேலும் சுமையாக மாறும். ஆகவே மக்கள் தற்போது தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...