Newsகுயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

குயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

-

தொலைதூர தீவில் 80 வயது மூதாட்டி கப்பல் விட்டுச் சென்ற பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள Lizard தீவில் 80 வயது மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியரான 80 வயது மூதாட்டி, Coral Adventurer என்ற சொகுசுப் பயணக் கப்பலில் 60 நாள் சொகுசுப் பயணத்தில் இருந்தார்.

சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக Lizard தீவுக்கு சென்றிருந்தது. பின் அங்கிருந்த புறப்பட்ட சொகுசு பயணக்கப்பல் மூதாட்டியை கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் 80 வயது மூதாட்டி அந்த தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, மூதாட்டி மலையேற்றத்தின் போது கப்பல் குழுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவர் ஓய்வெடுக்க நின்ற போது மற்ற கப்பல் பயணிகளிடம் இருந்து பிரிந்துள்ளார்.

மூதாட்டி உயிரிழந்த நிலையில் கப்பல் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...