News16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை - பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய...

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய குடும்பம்

-

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த சமூக ஊடக தடையானது டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் “Empire Family” என அறியப்படும் பிரபலமான குடும்ப உறுப்பினர்கள், ஆஸ்திரேலியாவின் சமூக ஊடக தடைக்கு பிறகு ஆஸ்ரேலியாவில் இருந்து வெளியேறி பிரித்தானியாவுக்கு இடம்பெயர இருப்பதாக அறிவித்துள்ளது.

Empire Family என சமூக ஊடகத்தில் அறியப்படும் கணக்கில், Beck மற்றும் Bec Lea என்ற தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய 17 வயது மகன் Prezley மற்றும் 14 வயது மகள் Charlotte ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரித்தானியாவுக்கு இடம் பெயரும் இவர்களது முடிவு, தங்களது மகள் Charlotte தொடர்ந்து வீடியோக்களை பதிவிட உதவும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தாங்கள் சமூக ஊடகங்களை நல்ல முறையில் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...