ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று மாசுபாட்டின் ஆதாரமாக மாறும், இதில் கனரக லாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
இந்தச் சவாலைச் சமாளிக்க, New Energy Transport ஒரு மின்சார டிரக் அமைப்பைச் சோதித்துள்ளது.
மின்சார சரக்கு போக்குவரத்து டீசலை விட வேகமாகவும், மலிவாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பணி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 50 லாரிகளில் மின்சார அமைப்புகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2031 ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை 200 லாரிகளாக உயர்த்த திட்டம் ஆகும்.
இந்த லாரிகள் 3 முதல் 5 மெகாவாட் grid electricity மற்றும் on-site solar power ஆகியவற்றின் கலவையால் இயக்கப்படும். மேலும் 600 முதல் 700 கிலோவாட்-மணிநேர லாரி பேட்டரிகள் மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக ரீசார்ஜ் செய்யக்கூடிய உயர்-சக்தி சார்ஜர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
டீசல் லாரிகளை விட மின்சார லாரி 480 கிமீ வேகமாகவும் திறமையாகவும் பயணிக்க முடியும் என்பது ஒரு சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கனரக வாகனங்களை மின்சார அமைப்பாக மாற்ற முடிந்தால், காற்று மாசுபாடு மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்று New Energy Transport-இன் இணை தலைமை நிர்வாகி டேனியல் ப்ளீக்லி கூறுகிறார்.





