Perthபெர்த்தில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பிய நபர்

பெர்த்தில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பிய நபர்

-

14 வயது சிறுவனைப் போல நடித்து இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் 31 வயது ரிவர்டன் நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

செப்டம்பர் 1 முதல் 7 வரை, ஜூண்டலப்பில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் அவர்களைச் சந்திப்பதற்கு முன்பு, 13 முதல் 15 வயதுடைய இளைஞர்களுடன் தொடர்பு கொள்ள குறித்த நபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

குறித்த நபர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும், அந்த இளைஞர்கள் தங்கள் வீடியோ பதிவின் ஒரு பகுதியை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை சுரண்டல் நடவடிக்கைப் பிரிவின் விசாரணைக்குப் பிறகு, ஜப்பானில் விடுமுறையிலிருந்து திரும்பிய அவர் வியாழக்கிழமை பெர்த் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

16 வயதுக்குட்பட்ட ஒருவரை பாலியல் செயலில் ஈடுபட வைக்கும் நோக்கில் மின்னணு தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியிருப்பாளர் அல்ல என்றும், வேலை விசாவில் பெர்த்தில் வசித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...