Newsவிமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

-

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000 அடி உயரத்தில் Farmation Jump-இற்காக 16 பேர் கொண்ட குழு தயாரான போது யாரும் எதிர்பாராத சம்பவம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

முதல் ஸ்கைடைவர் குதிப்பதற்காக வெளியேறும் இடத்தை நெருங்கிய போது,  ஸ்கைடைவரின் தற்காப்பு பாராசூட் விமானத்தின் கைப்பிடி சிக்கிய எதிர்பாராத விதமாக திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த நொடியே நிலைகுலைந்த ஸ்கைடைவர் விமானத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டார். பாராசூட் விமானத்தின் வால் பகுதியில் சிக்கிக் கொண்டு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்த குழப்பமான நிலையில் விமானத்தில் இருந்து குதிக்க தயாராக இருந்த கேமரா ஆப்பரேட்டரும் நிலைதடுமாறி விமானத்தில் இருந்து கட்டற்ற வீழ்ச்சிக்கு ஆளானார்.

இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிக் கொண்ட ஸ்கைடைவர் தனது கொக்கிக் கத்தியை பயன்படுத்தி விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட தற்காப்பு பாராசூட்டின் கயிற்றை அறுத்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

பின்னர் அவரது பிரதான பாராசூட்டை பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கியுள்ளார். அதே சமயம் விமானத்தின் வால் பகுதி சேதமடைந்ததால், விமான அவசர உதவிக்காக “mayday” அழைப்பை விடுத்தார்.

இருப்பினும், அந்த விமானியே விமானத்தை வெற்றிகரமாக தரையில் இறக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு பணியகம் அதிகாரிகள் இந்த காணொளிக் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...