சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Bondi கடற்கரையில், யூதா்களின் ‘ஹனுக்கா’ பண்டிகை தொடக்க கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையொட்டி, லண்டன் பெருநகர பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெருநகரின் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யூத சமுதாய மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும், அந்தப் பகுதிகளில் கூடுதலாக ரோந்து பணிகளையும் மேற்கொள்கிறோம்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த யூத சமூகத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.
அதேநேரம், பொது நிகழ்வுகளிலும், மற்ற இடங்களிலும் மக்கள் தொடா்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘Bondi கடற்கரையில் நடந்த தாக்குதல், யூதா்களுக்கு எதிரான வெறுப்புணா்வில் செய்யப்பட்ட தீவிரவாத செயல் என்ற செய்தி மிகவும் அருவருப்பானது.
பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆஸ்திரேலியாவுக்கும் யூத சமூகத்தினருக்கும் பிரிட்டன் எப்போதும் துணையாக நிற்கும். ஹனுக்கா நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி, சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.





