Sydneyசிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

சிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

-

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bondi கடற்கரையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 50 வயதுடைய துப்பாக்கிதாரி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், இந்தியக் கடவுச்சீட்டையே வைத்திருந்துள்ளார்.

யூதர்களின் ‘Hanukkah’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குறித்த நபரும் அவரது மகனுமே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகளில் ஒருவரை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் துணிச்சலாகப் பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார்.

இதன்போது கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...