Sydneyசிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

சிட்னியில் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ஒரு இந்தியாரா?

-

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் இந்தியக் கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bondi கடற்கரையில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 50 வயதுடைய துப்பாக்கிதாரி இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், இந்தியக் கடவுச்சீட்டையே வைத்திருந்துள்ளார்.

யூதர்களின் ‘Hanukkah’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குறித்த நபரும் அவரது மகனுமே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகளில் ஒருவரை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் துணிச்சலாகப் பின்னால் இருந்து தாக்கி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார்.

இதன்போது கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் கொடூரத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest news

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Bondi துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய செல்வாக்கு கொண்டிருப்பது உறுதி

Bondi துப்பாக்கிதாரிகள் 'இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டவர்கள்' என்று அரசாங்கம் கூறுகிறது. ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் Krissy Barrett கூறுகையில், இந்த ஜோடி இஸ்லாமிய அரசால் (Islamic...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...