News600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

-

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னல் சாதனை புத்தகத்தில் பிராங்கோ இடம்பிடித்தார். அப்போது 32 வயதான பிராங்கோவின் எடை 600 கிலோவாக இருந்தது.

இந்த சாதனையின் போது, “என் உடல் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அதன் போக்கில் தானாகச் சென்றது. நான் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முயன்றேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் நான் விரக்தியடைந்தேன்.” என்று பிராங்கோ குறிப்பிட்டிருந்தார்.

பிராங்கோவால் தானாக எழுந்து கழிப்பறைக்குகூட செல்ல முடியாத நிலையில், அவரை நகர்த்துவதற்கு 8 பேர் கொண்ட குழு தேவைப்பட்டது.

இதனிடையே, கடும் உணவுக் கட்டுப்பாடுகள், இரண்டு முறை அறுவைச் சிகிச்சை எனப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தனது உடல் எடையை பாதிக்கும் குறைவாக 260 கிலோவாக குறைத்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றில் இருந்தும் வெற்றிகரமாக பிராங்கோ மீண்டிருந்தார்.

இருப்பினும், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைரொய்டு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பிராங்கோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடுமையான சீறுநீரகத் தொற்று ஏற்பட்டது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 41 வயதில் பிராங்கோ உயிரிழந்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...