Newsஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

ஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

-

எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்

இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், தான் “ஒரு பாலியல் பிம்பமாக சுருக்கப்பட்டதைப்” போல உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், பயனர்கள் அந்த சேட் போட்டிடம் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் ஆடைகளை நீக்கி, ஆபாசமான உடையில் தோன்றுமாறு செய்வது மற்றும் அவர்களைப் பாலியல் சூழல்களில் சித்தரிப்பது போன்ற பல செயறபாடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

க்ரோக் -ஐ உருவாக்கிய நிறுவனமான xAI, இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “பாரம்பரிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன” என்ற தானியங்கிப் பதிலையே வழங்கியது.

சமந்தா ஸ்மித் என்பவர் தனது புகைப்படம் மாற்றப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலளித்த பலரும் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், வேறு சிலரோ சமந்தாவின் மேலும் பல படங்களை உருவாக்குமாறு க்ரோக்கிடம் கேட்டுள்ளனர்.

“அங்கே ஆடையில்லாமல் இருப்பது நான் இல்லை என்றாலும், அது என்னைப் போலவே இருந்தது. யாராவது என்னுடைய நிர்வாணப் படத்தையோ அல்லது பிகினி படத்தையோ உண்மையில் பதிவிட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்ற அத்துமீறலாகவே இதையும் நான் உணர்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...