பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிமலையை அண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 3000 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பாறைகள் அவ்வவ்போது விழுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிமலையின் பள்ளத்திலிருந்து 6 கிலோமீற்றர் (3.7 மைல்) சுற்றளவில் உள்ள 729 வீடுகளில் இருந்து 2,800 க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.





