தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வட இந்தியாவில் இது செய்தியாகவும் வெளியான நிலையில், இதுபற்றி தனுஷோ அல்லது மிருணாள் தாகூரோ இதுவரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், “உண்மையிலேயே அப்படியிருக்குமோ?” என்ற கேள்வி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பொலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்குநர் கூறியதாவது:
“இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?
விவாகரத்து நடந்தபோது, மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள்.
தனுஷைப் பொறுத்தவரை, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அதற்கு காரணம், தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை.
தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.





