ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில் இரண்டாவது சுறாவைக் கண்டதைத் தொடர்ந்து, Surf உயிர்காக்கும் படையினர் எச்சரிக்கைகளை விடுத்து கடற்கரையை மூடினர் .
நேற்று Dee Why, Palm Beach மற்றும் Whale Beach ஆகிய இடங்களிலும் சுறாக்கள் காணப்பட்டன. மேலும் அந்த கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18 முதல் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு சுறா தாக்குதல்களைத் தொடர்ந்து NSW மாநிலம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது .
அந்த சம்பவங்களில், 12 வயது Nico Antic இறந்தார். மற்றொரு சம்பவத்தில், Manly கடற்கரை அருகே surfing செய்து கொண்டிருந்த 27 வயது Andre De Ruyter, ஒரு சுறாவால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீண்ட வார இறுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக drone கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும், கூடுதல் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாகவும் Surf Lifesaving NSW தெரிவித்துள்ளது.





