Newsவிக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை - 24 கிராமங்களுக்கு வெளியேற...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

-

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் நேற்று இரவு வெளியேறுமாறு கூறப்பட்டனர்.

Carlisle நதி தீ மீண்டும் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்றும், இன்று அது தவிர்க்க முடியாமல் பரவும் அபாயம் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

1,100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் விக்டோரியா முழுவதும் மொத்த தீ தடை அமலில் உள்ளது.

Walwa மற்றும் Wonnangatta–Dargo பகுதிகளில் தீ விபத்து இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் , “Leave now”, “Not safe to return” மற்றும் “Monitor conditions” போன்ற எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களில் அப்பகுதியை நாசமாக்கிய Longwood தீ மீண்டும் பரவும் அபாயமும் உள்ளது.

மெல்பேர்ணில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், Mildura, மற்றும் Ouyen போன்ற வடக்குப் பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கிறது. மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் தீயின் திசை மாறக்கூடும்.

தீயைக் கட்டுப்படுத்த பன்னிரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கனடாவிலிருந்து 74 தீயணைப்பு வீரர்கள் இன்று வர உள்ளனர்.

அடுத்த சில நாட்களில் இந்த தீ கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் என்பதால், பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அதன்படி, Gellibrand, Carlisle River, Barongarook, Kawarren, Forrest, Beech Forest மற்றும்Great Otway தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவும்.

Colac Showgrounds நிவாரண மையத்திற்கு பெரிய விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன. அதே நேரத்தில் Colac Blue Water Fitness மையம் மற்றும் Grovedale Community Hub-இல் மக்கள் கூடிவருகின்றனர்.

இதற்கிடையில், Great Otway தேசிய பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள் மற்றும் முகாம் தளங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் EmergencyVic App மூலம் உங்கள் பகுதியில் உள்ள நிலைமையை அடிக்கடி சரிபார்க்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர் .

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...