தப்பியோடிய சந்தேக நபரான Desi Freeman இறந்துவிட்டதாக விக்டோரியா காவல்துறை உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளது.
விக்டோரியாவின் Mount Buffalo தேசிய பூங்கா பகுதியில் 56 வயதான Freeman-ஐ தேடுவதற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இன்று காலை ஒரு புதிய தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அந்தப் பகுதியில் உள்ள குகைகள், பழைய சுரங்கங்கள் மற்றும் ஆறுகளை ஆய்வு செய்ததாகவும், Freeman உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் 26, 2025 அன்று, Porepunkahவில் உள்ள தனது பண்ணையில் ஒரு வாரண்டை நிறைவேற்றும்போது இரண்டு காவல்துறை அதிகாரிகளை அவர் சுட்டுக் கொன்றார், மற்றொரு அதிகாரியைக் காயப்படுத்தினார் .
சம்பவத்திற்குப் பிறகு Freeman காட்டுக்குள் ஓடிவிட்டதாக போலீசார் சந்தேகித்தனர்.
சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அப்பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்த ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்தப் புதிய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த வாரம் Freeman-இன் உடலைக் கண்டுபிடிக்க NSW காவல்துறையின் சடல நாயும் பயன்படுத்தப்பட உள்ளது.
Freeman இறந்துவிட்டாரா, வேறு யாரேனும் மறைத்து வைத்தாரா, அல்லது காடுகளில் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Freeman தொடர்பான தகவல்களுக்கு இன்னும் 1 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படுவதாகவும் காவல்துறை வலியுறுத்துகிறது.





