தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Fleurieu தீபகற்பத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Deep Creek தேசிய பூங்காவில் பரவி வரும் தீ, Cape Jervis மற்றும் Silverton குடியிருப்பாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.
250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் பலத்த காற்று காரணமாக அவர்கள் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து காரணமாக கங்காரு தீவுக்கான படகு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய நேரமில்லாமல் போனதாகவும், தங்கள் கார்களிலேயே இரவைக் கழிக்க வேண்டியிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய மிகவும் வெப்பமான வானிலை மற்றும் காற்று காரணமாக நிலைமை மோசமடையக்கூடும் என்று நாட்டு தீயணைப்பு சேவை தலைமை அதிகாரி Brett Loughlin கூறுகிறார்.
தீ விபத்தில் ஒரு வணிக நிறுவனம் சேதமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன.





