ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார்.
இந்தப் புதிய சட்டங்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள், ஒரு அரசியல் கட்சி தேர்தலில் செலவிடக்கூடிய பணத்தின் அளவிற்கும், ஒரு தனிநபர் அளிக்கக்கூடிய நன்கொடைகளுக்கும் வரம்புகளை விதித்துள்ளன.
இது ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும் அரசியலில் பணத்தை செலவிடும் உரிமையையும் மீறுவதாக கிளைவ் பால்மர் சுட்டிக்காட்டுகிறார்.
பால்மரின் Trumpet of Patriots கட்சி 2024-2025 நிதியாண்டில் கிட்டத்தட்ட $53 மில்லியன் செலவிட்ட போதிலும், அவர்களால் நாடாளுமன்றத்தில் எந்த இடத்தையும் வெல்ல முடியவில்லை.
இதற்கிடையில், பணக்காரர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த பணத்தின் சக்தியைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்க அமைச்சர் டான் ஃபாரெல், உயர் நீதிமன்றத்தில் இந்தச் சட்டப்பூர்வ சவாலை ஆதரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அரசியலில் வரம்பற்ற பணம் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் கூறினார்.
இருப்பினும், சுயாதீன அரசியல் குழுக்களும் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன, இந்த கட்டுப்பாடுகள் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.





