தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 57 வயதான விமானி மற்றும் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
விமானத்தின் சிதைவுகள் தற்போது கரை ஒதுங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பேரிடர் சேவைகள், போலீசார் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றன.
ஆஸ்திரேலிய விமானப் பாதுகாப்பு வாரியம் (ATSB) நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையும் தயாரிக்கப்படும்.





