சிட்னி Harbour பாலத்தில் நெரிசல் நேரத்தில் பல மின்-பைக் ஓட்டுநர்கள் சவாரி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட YouTuber ஒருவருக்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவைச் சேர்ந்த e-bike influencer Sur Ronster-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பல குழந்தைகள் ஹெல்மெட் அணியாமல் பள்ளி சீருடை அணிந்திருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
பின்னர், தான் சிட்னிக்குப் புதியவர் என்றும், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் பாலத்தில் ஏறிச் சென்றதாகவும் Sur Ronster கூறினார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
சட்டப்படி, சிட்னி Harbour பாலத்தின் பிரதான சாலையில் மின்-சைக்கிள்கள் உட்பட மிதிவண்டிகளை ஓட்டுவது சட்டவிரோதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக, முறையற்ற வாகனம் ஓட்டியதற்காக Sur Ronster-இற்கு இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் $562 மதிப்புடையதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்ற செயல் என்றும், சம்பந்தப்பட்ட மற்ற ரைடர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.





