Newsஅமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

-

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. 

சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. 

ஆனால் சீனாவோ அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது. 

அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் திகதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து , அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என குற்றம் சாட்டியது. 

இப்படி உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க வான் பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்ததாகவும், அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், ‘அடையாளம் தெரியாத மர்ம பொருள்’ கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலி – 33 பேரை காணவில்லை

வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்...

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

விக்டோரியாவில் உணவு டெலிவரி செய்பவர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை

மெல்பேர்ண் முழுவதும் ஆபத்தான உணவு விநியோக ஓட்டுநர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த போலீசார் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். சில மணி நேரங்களுக்குள், 37 அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும் பல...

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...