Newsஅமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையில் மோதல் - மேலும் ஒரு மர்ம பொருளை சுட்டு...

அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையில் மோதல் – மேலும் ஒரு மர்ம பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

-

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீன உளவு பலூன் பறப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் 4-ம் திகதி போர் விமானம் மூலம் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 10-ம் திகதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்த அமெரிக்க இராணுவம் அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. 

இதை தொடர்ந்து, 11-ம் திகதி அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் யூகோன் நகரின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானத்தால் அது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஹூரான் ஏரிக்கு மேல் 20 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த இராணுவத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். அதன் பேரில் எப்-16 ரக போர் விமானம் ஏவுகணையை வீசி அந்த மர்ம பொருளை வீழ்த்தியது. 

அமெரிக்க வான்பரப்பில் அடுத்தடுத்து மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும், தொடர்ந்து அவை சுட்டுவீழ்த்தப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான ரிலாவ் நகரில் கடலுக்கு மேலே மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு ஆபத்து இல்லாமல் அதை சுட்டு வீழ்த்த தயாராகி வருவதாகவும் சீன கடற்படை தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...