Newsஅமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

அமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

-

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டின் வான்பரப்பில் அடுத்தடுத்து 2 மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டன. 

அதேபோல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்பரப்பில் மர்ம பலூன் பறந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அந்த நாட்டின் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளியில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை ரேடார் அமைப்பு கண்டறிந்தது. 

அதனை தொடர்ந்து உடனடியாக 2 போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் விமானங்கள் சென்றபோது அந்த இடத்தில் மர்ம பலூன் எதுவும் இல்லை. 

ரேடாரில் இருந்தும் அது மறைந்துவிட்டது. எனவே ருமேனிய வான்வெளிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என கூறப்பட்டது. 

அதேபோல் ருமேனியாவின் அண்டை நாடான மால்டோவாவும் தங்கள் வான்பரப்பில் மர்ம பலூன் தென்பட்டதாக தெரிவித்தது. 

அதுமட்டும் இன்றி வானில் மர்ம பலூன் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்டோவா தனது வான்வெளி முழுவதையும் தற்காலிகமாக மூடியது. 

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக இயக்கப்பட்டன. பல விமானங்கள் ருமேனியாவுக்கு மாற்றிவிடப்பட்டன. 

இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த மர்ம பலூன்கள் எங்கிருந்து வந்தன என்று இரு நாடுகளும் தெரிவிக்கவில்லை.

நன்றி தமிழன்

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...