Newsபடகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு

-

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை , உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். 

அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. 

இதில், 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். 

இதுவரை 59 உடல்களை மீட்டுள்ள இத்தாலி கடலோர மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இத்தாலி கடற்பகுதியில் படகு விபத்தில் 59-க்கு மேற்பட்ட அகதிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில்...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய விசா (துணைப்பிரிவு 491) அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2024-2025 நிதியாண்டில்,...

ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கான முக்கிய காரணங்கள் இதோ

லேபிளிங் தெளிவின்மை மற்றும் சில சேமிப்பு வழிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணம் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றில்...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...

சிட்னி ரயில் தாமதத்தால் வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவு

சிட்னியின் Southwest Metro பாதையின் கட்டுமானத் தாமதங்கள் ரயில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படும் வரை வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவாகிறது என்று...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...