Sportsஇலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி - அனைத்து டிக்கெட்டுக்களும்...

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி – அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனை

-

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...