உடல் மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோடிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கும் ஆஸ்திரேலியாவின் முதல் மருத்துவ மனை மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பக்கவாதம் – முதுகுவலி மற்றும் நீடித்த கோவிட் போன்ற மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
கை, கால்களை நகர்த்துவதில் சிரமம் உள்ள நோயாளிகளுக்கு உதவவும், அவர்களின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் ரோபோ இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
முதல் 100 நோயாளிகளுக்கு இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.





