Newsதனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

-

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த  பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே  அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...