Newsஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

-

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியும் சட்டத்தரணியுமான அலெஸ் பியாலியாட்ஸ்கி. பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார்.

பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரான இவர், கடந்த 1996-ம் ஆண்டு ‘வியாஸ்னா மனித உரிமைகள் மையம்’ என்கிற பெயரில் மனித உரிமை அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

இந்த அமைப்பு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பெலாரசின் ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சேண்டர் லுகாஷென்கோ, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு செய்து ஜனாதிபதியானதாக அலெக்சேண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெலாரசை அதிரவைத்தது.

இந்த போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய அரசு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனிடையே அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது.

அதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத பெலாரஸ் அரசு அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

இந்த நிலையில் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீதான வழக்கை விசாரித்து வந்த பெலாரஸ் நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நன்றி தமிழன்

Latest news

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர்கள்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான...

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் டிரம்ப் கொடுக்கும் அழுத்தம்

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் மீது தொழில்நுட்ப வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

16 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான ChatGPT

16 வயது சிறுவனின் மரணத்திற்கு ChatGPT காரணமாக இருந்ததாகக் கூறி, OpenAI மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...

நாளை முதல் விக்டோரியா மற்றும் NSW-க்கு வரும் பதின்ம வயதினருக்கான Uber

ஆஸ்திரேலியா முழுவதும் இளைஞர்களுக்காக Uber ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. "Uber for Teens" என்று அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து சேவை நாளை முதல் செயல்படும். இந்த சேவை...

தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்

தென் சீனக் கடலில் நடைபெறும் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று இணைந்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை வான் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் பயிற்சிகளுக்காக...