Newsமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல்...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல் விஞ்ஞானி

-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷ்ய அரசாங்கம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. 

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார். 

இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அண்டிரு பெல்ட்டால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

வாக்குவாதத்தின் போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 29 வயதுடைய நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...