Cinema8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை - நடிகை குஷ்பு...

8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை – நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து

-

இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘வி த வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குஷ்பு பேசியதாவது,

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெண்ணா, பையனா என்பதில் பிரச்னை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார். அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...