Newsகறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் - வெளியான...

கறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் – வெளியான அதிர்ச்சி சம்பவம்!

-

கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜுவர்கியின், கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல்(32), யாத்கிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுக்காவைச் சேர்ந்த பர்சானா பேகம்(28) என்பவரை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கறுப்பாக இருந்த காரணத்தால் தன் மனைவியை அவ்வப்போது திட்டி தீர்த்துள்ளார். உன் முகத்துக்கு எவ்வளவு பவுடர் போட்டாலும், ஹீரோயினியாக மாட்டாய் எனக் கிண்டல் அடித்துள்ளார். 

ஒருகட்டத்தில் மனைவியை திட்டி சித்ரவதையும் செய்ததோடு, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பர்ஜானா தன் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன், பர்ஜானா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை, பால் வியாபாரி ஒருவர் பர்ஜானா குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் வந்த பர்ஜானாவின் பெற்றோர் குழந்தைகளை மீட்டு உடன் அழைத்துச் சென்றுள்ளனர். காஜா படேல் தனது குடும்பத்தோடு தப்பியோடியுள்ளார்.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அத்துடன், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நன்றி தமிழன்

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...