Newsகனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

-

கனடாவின் கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் நேற்று முன்தினம் சாலையோரம் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் சிலர் சாலையோரம் நடந்து சென்றுளளனர். அப்போது அந்த வழியாக வந்த லொரி ஒன்று திடீரென சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர் அங்கு சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது. 

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்த விபத்தினை ஏற்படுத்திய லொரி சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...