Newsசூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து - நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி...

சூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து – நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

-

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது. 

இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது போன்று தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.

இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் நெறள.உழஅ.யர என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கின்றது. 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது. 

இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். 

தற்போது ஆய்வாளர்கள் கூறிய விஷயம் அறிவியல் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Latest news

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

ஆஸ்திரேலியாவில் தகுதிகள் இருந்தபோதிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்

அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் உயர் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கைகள், நாட்டில் திறமையான...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு மின்சார கட்டணத்தில் $1000 தள்ளுபடி

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான எரிசக்தி தள்ளுபடித் திட்டத்தின் கீழ்...