Newsசூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து - நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி...

சூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து – நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

-

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது. 

இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது போன்று தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.

இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் நெறள.உழஅ.யர என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கின்றது. 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது. 

இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். 

தற்போது ஆய்வாளர்கள் கூறிய விஷயம் அறிவியல் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...