Newsசூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து - நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி...

சூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து – நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

-

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது. 

இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது போன்று தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.

இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் நெறள.உழஅ.யர என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கின்றது. 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது. 

இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். 

தற்போது ஆய்வாளர்கள் கூறிய விஷயம் அறிவியல் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Latest news

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...