Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை குவித்தது.

அபாரமாக விளையாடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ஓட்டங்களை குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 55 ஓட்டங்களை விளாசினார். 

இதையடுத்து 204 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. 

முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. துவக்க வீரர் அபிஷேக் சர்மா, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின்னர் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடியை சாகல் பிரித்தார். ஹாரி ப்ரூக் 13 ஓட்டத்தில் வெளியேறினார். 

வாஷிங்டன் சுந்தர் (1), கிளென் பிலிப்ஸ் (8) ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணி தோல்வியை நோக்கி பயணித்தது. 

அடில் ரஷித் (18), அணித்தலைவர் புவனேஸ்வர் குமார் (6), அப்துல் சமது (32 நாட் அவுட்), உம்ரான் மாலிக் (19 நாட் அவுட்), ஆகியோரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை எடுத்தது. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யுஸ்வேந்திர சாகல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட், ஹோல்டர், அஷ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நன்றி தமிழன்

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...