Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், அணித்தலைவர் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். 

இந்த ஜோடி 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்ச ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ஓட்டம் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ஓட்டத்திலும் ஷாருக் கான் 11 ஓட்டத்திலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டம் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ஓட்டம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ஓட்டங்கள், துருவ் ஜூரல் 32 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...