Newsஉலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம்

உலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம்

-

பொலிவுட் சினிமாவில் “கிங்” கான் ஆகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் தற்போது ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.

அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் ஜூன் 2-ஆம் திகதி படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க டைம்ஸ் பத்திரிகை வாசகர்களின் கருத்துக்கணிப்பின்படி தற்போது செல்வாக்குமிக்க டொப் 100 நபர்களுக்கான வாக்கெடுப்பில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது 2023-ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் நடிகர் மைக்கேல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற பலரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மொத்தம் பதிவான 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4% வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஷாருக்கானுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...