Newsவிசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-

டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்துள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க கூட முடியாது.

அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறியுள்ளன.

நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன.

இவை, விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன. அதன்பின்னர், இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன.

இது குறித்து டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் தெரிவிக்கையில்,

இந்த பறவைகள், சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்து கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது.

அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாகவுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற இரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன.

இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை.

அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.

இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம் ஆனது, உலகம் முழுவதும் இந்த விஷம் பரவியுள்ளது என அடையாளம் காட்டியுள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த இரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.

இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை. அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற இரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா தெரிவித்துள்ளார்.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...