Newsவிசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-

டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்துள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க கூட முடியாது.

அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறியுள்ளன.

நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன.

இவை, விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன. அதன்பின்னர், இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன.

இது குறித்து டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் தெரிவிக்கையில்,

இந்த பறவைகள், சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்து கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது.

அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாகவுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற இரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன.

இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை.

அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.

இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம் ஆனது, உலகம் முழுவதும் இந்த விஷம் பரவியுள்ளது என அடையாளம் காட்டியுள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த இரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.

இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை. அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற இரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் தூக்கத்திலிருந்து எழுந்து கணவனைக் கொன்ற மனைவி

விக்டோரியாவில் உள்ள பொது வழக்குரைஞர் சேவை, கொலைக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் இக்கட்டான சூழ்நிலைக்கு விடப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு 2023...

பணவீக்க விகிதம் குறித்து ஜிம் சால்மர்ஸின் கணிப்பு

ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சார்மஸ் இன்று மக்களுக்கு சில நம்பிக்கையை அளித்துள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதம் இது நான்கு மடங்கு வரை குறையும்...

டட்டனின் வெளிநாட்டு மாணவர் குறைப்புகளை விமர்சிக்கும் கல்வித் துறை

சர்வதேச மாணவர் சேர்க்கையை 25 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் கூட்டணியின் திட்டம் சர்வதேச கல்வித் துறையில் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதம்...

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

மெல்பேர்ணில் திடீரென குறைந்த வெப்பநிலை

2025 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் மிகவும் குளிரான காலை நேற்று (07) காலை பதிவாகியுள்ளது. அதன்படி, நேற்று காலை 7.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில்,...