Newsவியாழன் கோள் தொடர்பில் புதிய ஆய்வை மேற்கொள்ளும் ஐரோப்பா

வியாழன் கோள் தொடர்பில் புதிய ஆய்வை மேற்கொள்ளும் ஐரோப்பா

-

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே வியாழன் கோளின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ரொக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ரொக்கெட் ஏவப்படுகிறது.

ரொக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும்.

குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும்.

வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும்.

அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும்.

இது குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகின்றது.

நன்றி தமிழன்

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...