Newsவியாழன் கோள் தொடர்பில் புதிய ஆய்வை மேற்கொள்ளும் ஐரோப்பா

வியாழன் கோள் தொடர்பில் புதிய ஆய்வை மேற்கொள்ளும் ஐரோப்பா

-

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே வியாழன் கோளின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ரொக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ரொக்கெட் ஏவப்படுகிறது.

ரொக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும்.

குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும்.

வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும்.

அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும்.

இது குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகின்றது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கான புதிய சட்டங்கள்

தெற்கு ஆஸ்திரேலியா குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கு மீண்டும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தொடர்ந்து, குடும்ப வன்முறை குற்றவாளிகள் நாட்டின் சில கடுமையான...

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நிமோனியா பாதிப்புகள்

நியூ சவுத் வேல்ஸில் சிறு குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில்...

மெல்போர்னின் Clyde North-ஐ சுற்றியுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரம் பற்றிய வாக்குறுதி

பல வருடங்களாக மோசமான கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளால் அவதிப்பட்டு வரும் Melbourne Clyde North பகுதியைச் சூழவுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரத்தை நிறுவித் தருவதாக வாக்குறுதி...

கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம்

பல்லாரட் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் மருத்துவ கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்த தேசிய கல்வி பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைவலி, புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள், கால்-கை வலிப்பு...

அவுஸ்திரேலியாவுக்கு வர விசா கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஒரு அறிவுரை

ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு உள்துறை அமைச்சகம் தொடர் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி அவுஸ்திரேலியர்களும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...