Newsகனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

-

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அரசாங்க தொழிற்சங்கமான மத்திய பொதுத்துறை தொழிற்சங்கம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானம் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 155000 ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டின் 250 இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் சம்பள உயர்வு, தொழில் ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தில் குதித்துள்ள ஊழியர்களில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

போராட்டம் முன்னெடுக்கப்படும் காலப் பகுதியிலும் பேச்சுவார்த்தைகளை தொடர உத்தேசித்துள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...